Thursday, July 2, 2009

சித்திர கவிதை

ஸ்ரீ வைணவ ஆசாரியர் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘சித்ரபத்ததி’யில் உள்ள ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைக் கண்டு வியந்த அடியேன் இளம் உள்ளத் துடிப்பின் விளைவாக பின்வரும் கவிதைகள் எழுந்தன:

மண்ணுள்ளே பிறந்தாய் மறையாத புகழுற்றாய்
பண்ணுள்ளே பிணைந்தாய் குறையாத சுகமுற்றாய்
கண்ணுள்ளே புகுந்தாய் கற்றோத நிகரற்றோய்
எண்ணுள்ளே புரந்தாய் ஏற்றாத சகமற்றோய்

நடந்தாய் தாளற நங்கையின் கைபிடித்து
மடந்தாள் தானுற லங்கையின் கையொடித்து
கிடந்தாய் யாதுற காவிரியில் கைமடித்து
இடர்தான் யானறவே விழையின் கைநெடித்து

(மேலுள்ள இரு கவிதைகளில் இரு அடிகளுக்கு நடுவே “/\/\/\” என்ற கோடுகளைப் போட்டால் அதே அடிகள் வருவதைக் காணலாம்.) ---

பின் வரும் கவிதையில் ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது சீரின் இறுதி எழுத்தை மையமாக வைத்து அதைச் சுற்றி எட்டு வட்டங்களை வரைந்து எட்டு திசைகளிலும் வரிசையாக சீர்களிலுள்ள எழுத்துக்களை வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக எழுதினால் எண் வரிசை சக்கரம் ஒன்று அமையும்.

கமலத்து வதிந்து காத்தருள் புரிந்து
அமரரும் துதித்து ஆழ்கடல் படுத்து
அமுதனின் மனத்து அமர்ந்த அழகிது
எமதுளம் இசைத்து எழுமுனைப் பணிந்து
அடியேன் தாஸ்ன்,
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்
3-7-2009
---- (தொடரும்)

3 comments:

  1. நீங்களே வடிவமைத்துக் காட்டினால் எளிதில் புரியும்.

    தேவ்

    ReplyDelete
  2. அதைச் செய்வதற்கு வேண்டிய டெக்னிகல் அறிவு தற்போது அடியேனிடம் இல்லை. ஸ்ரீமான் ரகுவீரதயாள் ஸ்வாமி அதைச் காட்டியிருக்கிறார், சந்தவசந்தம் வலையில்.
    முதல் இரண்டு கவிதைகளை தாங்களே செய்துவிடலாம்.
    இரண்டு அடிகளை எடுத்துக் கொண்டு, முதல் அடியிலுள்ள முதல் எழுத்தை இரண்டாம் அடியிலுள்ள 2-ம் எழுத்திற்கு ஒரு கோடு போட்டு இணைக்கவேண்டும். அவ்வாறே, 2-ம் அடியிலுள்ள முதலெழுத்தை முதல் அடியிலுள்ள 2-ம் எழுத்திற்கு கோடு போடவேண்டும் இப்படியே அடுத்து அடுத்து உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இணைத்துக் கோடு போட்டு சென்றால், இரண்டு அடிகளையும் காணலாம்.
    தாஸன்
    ஸ்ரீனிவாஸன்

    ReplyDelete
  3. திரு தேவராஜன் ஸ்வாமி http://thiruppul.blogspot.com சென்று பார்க்கலாம்.

    ReplyDelete